×

கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிகானப்பள்ளி ஊராட்சி சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகளில் வெள்ளை கோடு வரையும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தேவி கோவிந்தராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் செல்வி பாஸ்கர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : road ,Kattikanapalli ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி