ரயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது கடுமையான குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
