×

நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பயணம்

செங்கல்பட்டு, மார்ச் 14: ​செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம் 2.0” திட்டத்தின் கீழ் சுகாதார நடைபயணம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மைதானம் முதல் திருமணி வரை 8 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைபயணத்தை செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ​இந்தத் திட்டம் பொதுமக்களிடையே உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அன்றாட நடைபயிற்சியை ஊக்கப்படுத்தவும் தொடங்கப்பட்டது. உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வாரந்தோறும் இத்தகைய நடைபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Let's Walk and Get Well Health Walk ,Chengalpattu ,Walk ,Medical and Public Welfare Department, Public Health and Immunization Department.… ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்