அந்தியூர், மார்ச் 14: அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஊராட்சி, அணைக்கரடு பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய நிலமில்லா ஏழைகளுக்கு வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு, நேற்று முன்தினம் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் அளவீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் இந்த இடத்தை வேறு ஊரைச்சேர்ந்தவர்களுக்கு வருவாய் துறையினர் முழுவதுமாக ஒப்படைப்பதாக, கிராம மக்கள் மத்தியில் தகவல் பரவத்தொடங்கியது.
