×

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை: முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதை கண்டித்து போராட்டம் நடந்தது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவி தொகை வழங்கப்படும்.

யுவ சத்தி என்ற இந்த திட்டம் வரும் ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச மகளிர் தினம் இன்று நடப்பதையொட்டி இது மார்ச் 7 (நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. யுவ சத்தி திட்டத்தை பொறுத்த வரையில் தற்போது படித்து கொண்டிருக்கும் மற்றும் கல்வி உதவி தொகையை தவிர வேறு எந்த திட்டங்கள் மூலமும் பயன்பெறாத அனைவருக்கும் வழங்கப்படும்.

21 முதல் 40 வயதுக்குட்பட்ட , 1 கோடி பேர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் உதவித்தொகை தவிர வேறு எந்தத் திட்டங்களின் பயனாளிகள் அல்ல. அரசாங்கம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வங்கத்தில் வேலையின்மை விகிதம் 40 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் மம்தா கூறினார்.

Tags : SSLC ,Chief Minister ,Mamata Banerjee ,West Bengal ,Election Commission ,
× RELATED தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க...