குமரி: கன்னியாகுமரி அருகே கடலில் படகு மீது அடையாளம் தெரியாத சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளங்கரை துறைமுகத்தில் இருந்து சென்ற படகு மீது சரக்கு கப்பல் மோதியது. சரக்கு கப்பல் மோதிய விபத்தில் படகு சேதமடைந்து மூழ்கியதில் அதில் இருந்த 11 பேரும் கடலில் தத்தளித்தனர். கடலில் தத்தளித்த 11 பேரில் 9 பேரை சக மீனவர்கள் மீட்டனர்; மேலும் இருவரை தேடும் பணி தீவிரம். மீட்கப்பட்ட 9 பேரில் பலத்த காயமடைந்த 4 மீனவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
