ஈரோடு: மதுரை மாவட்டத்தில் இன்று (1ம் தேதி) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக மதுரை மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து போக்குவரத்து போலீசார் 30 பேர், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் 35 பேர் என மொத்தம் 65 போலீசார் நேற்று மதுரைக்கு போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், பிரதமர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின், மதுரையில் இருந்து ஈரோடு திரும்புவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
