டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கத் தவறிவிட்டதால் வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். “நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. உண்மை வென்றது” என மதுபான கொள்கை வழக்கில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களின் முன்பு உடைந்து அழுதபடி பேட்டியளித்தார்.
