×

அரசின் சாதனைகள் வீடு, விடாகச் சென்று மக்களிடம் தெரிவிப்பது தவறில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று மக்களிடம் தெரிவிப்பதில் என்ன தவறு உள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில் செய்தித் துறை தொடர்பாக விடுவீடாகச் சென்று செயல்படுத்திய அரசு திட்டங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் அரசின் இந்த திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு எதிர்த்து கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு மக்கள் பணிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், மாநில அரசு சாதனைகளை வீடுவீடாக சென்று மக்களிடம் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியது. மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டம் குறித்தும், அதன் நன்மை, தீமைகள் குறித்தும் மக்களிடம் கருத்து தெரிவிப்பதில், கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,Kerala ,
× RELATED உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான...