×

ஐஎன்எஸ் தாராகிரி வரும் 3ம் தேதி கடற்படையில் இணைப்பு

 

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக பிராக்ஜட் 17ஏ திட்டத்தின் கீழ் அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி நீலகிரி பிரிவின் 4வது கப்பலான ஐஎன்எஸ் தாராகிரி மும்பையில் உள்ள மசாகான்டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கப்பலானது கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி மும்பையில் உள்ள எம்டிஎல் தளத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிவேக ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதத் தொகுப்புக்களை கொண்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எதிரி நாட்டு ரேடார்களின் கண்ணில் படாமல் மறைந்து செல்லும் ஸ்டெல்த் வசதி கொண்ட போர்க்கப்பலான தாராகிரி வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி இந்தியக் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த இணைப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். இந்த போர்க்கப்பலின் ஆயுத தொகுப்பு உலகத்தரம் வாய்ந்தது. இதில் அதிவேக தரையில் இருந்த தரைக்குத் தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வான்வெளிக்கு தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Navy ,New Delhi ,Indian Navy ,Nilgiris Group ,Masakandak Shipbuilding Company ,Mumbai ,
× RELATED ஆந்திரா ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய்: அமைச்சர் தகவல்