- கோர்ட் கிளை விசாரணை நீதிமன்றம் உத்தரவிடுகிறது
- மடப்புரம் கோவில்
- மதுரை
- விசாரணை நீதிமன்றம்
- மடபுரம்
- அஜித்
- Icourt
- அஜித் குமார்
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை வழக்கை 6 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் கொலை வழக்கில் காவலர்களை மன்னிக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் ஜாமின் கோரி காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அஜித்குமார் நகையை திருடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஐகோர்ட் கிளையில் சிபிஐ வாதிட்டது. சட்டவிரோதமாக செயல்பட முடியாது என உயரதிகாரிகளிடம் காவலர்கள் சொல்ல வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று காவலர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
