சேலம், ஜன.30: சேலம் களரம்பட்டியில் கார் மெக்கானிக் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.சேலம் களரம்பட்டி மெயின்ரோடு ஜெயின் நகர் பகுதியில், சௌந்தரம் என்பவர் கார் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்தவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார், வேன், இருசக்கர வாகனம் என பல லட்சம் மதிப்பிலான வாகனங்கள் தீயில் கருகியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.