×

10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது

பணகுடி: நெல்லை மாவட்டம், பணகுடி செய்யது கரீம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் லட்சுமணன் (16). இவர் அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவ்வப்போது வீட்டருகேயுள்ள சபரிராஜன் (23) வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பார். கடந்த 5ம் தேதி வீட்டில் சபரிராஜன் தனியாக இருந்தார். அப்போது அங்குடிவி பார்ப்பதற்கு லட்சுமணன் வந்தார். டிவி பார்த்துக் கொண்டிருந்த போது சபரிராஜனுக்கும், லட்சுமணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சபரிராஜன் அரிவாளால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணனை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சபரிராஜனை பிடித்து பணகுடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் லட்சுமணன் நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து சபரிராஜன் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Panagudi ,Lakshmanan ,Mariappan ,Karim Street, Nellai district ,Sabariraja ,
× RELATED கோவையில் வாலிபர் அடித்து கொலை உறவினர்...