×

நெல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் 15க்கும் அதிகமான வீடுகள் மழையால் இடிந்து சேதம்: நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல்

 

நெல்லை: நெல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் 15க்கும் அதிகமான வீடுகள் மழையால் இடிந்ததாக நெல்லை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 6 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, குறிச்சி, நடுவக்குறிச்சி, தருவை, சேரன்மகாதேவியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது

Tags : Nellai ,Nellai district administration ,Cheranmahadevi ,Nellai Town ,Palayankottai ,Kurichi ,Nadukurichi ,Tharuvai ,Cheranmahadevi… ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...