×

சென்னை ஐஐடியில் கேப்ஸி சார்பில் 20வது தேசிய மாநாடு: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: ஐஐடி மெட்ராஸ் அரங்கில் கேப்ஸி-யின் 20வது தேசிய மாநாட்டை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கிவைத்தார். சென்னை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா அரங்கில் சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரி (கேப்ஸி) தனது 20வது தேசிய மாநாட்டை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

அதேபோல், இம்மாநாட்டில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த பாதுகாப்பு பணியாளர்களுக்கு ‘கோல்டன் கார்ட்’ விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கேப்ஸியின் தேசிய தலைவர் குன்வர் விக்ரம் சிங், தமிழ்நாடு பிரிவு தலைவர் நெவில் ரயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : 20th National Conference on Capsi ,IID ,Chennai ,Minister ,C. V. Ganesan ,Labour Welfare ,C.C. ,20th National Conference of CAPSI ,IIT Matras Arena ,V. Ganesan ,Central Association of Private Security Industry ,CAPSI ,20th National Conference ,Chennai IIT Madras Research Park Arena ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்