×

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை

சாயல்குடி,ஜன.6:  அரசு கல்லூரிகளில் யு.ஜி.சி தகுதி பெற்று கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அசச்சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில், ராமநாதபுரம் வந்த முதலமைச்சரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி நிரந்தரம் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என  2011 சட்ட பேரவையில் தெரிவித்தார். அதன் பிறகு தாங்களும் நிரந்தரம் செய்யப்படுவதாக கூறி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளது. எனவே இன சுழற்சி முறையை பின்பற்றி யு.ஜி.சி தகுதி பெற்றவர்களை 1-1 என்ற விகிதத்தில் பணிநிரந்தர செய்ய வேண்டும், பணி நியமன ஆணை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Honorary Lecturers ,
× RELATED கலை மற்றும் அறிவியல், பிஎட்...