×

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் வரும் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் வரும் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி.நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000 ஊதியமாகவும், 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000 ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000 ஊதியமாகவும் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையலாம்.மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற லிங்கில் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தும் கல்விச் சான்றிதழ் பாஸ்போட் அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு வரும் 3ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bhutan's Health Ministry ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்