×

கூலித்தொழிலாளி குட்டையில் பிணமாக மீட்பு

கோவை, டிச.31: கோவை அருகே 8 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கூலித்தொழிலாளி குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். கோவை அடுத்த சாடிவயல் பொட்டபதி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் (50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 8 நாட்களுக்கு முன்பு அங்கு உள்ள காட்டுப்பகுதிக்கு கீரை பறிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சாடிவயல் அருகே உள்ள குட்டையில் அவர் பிணமாக மிதப்பதை அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த வெள்ளிங்கிரி என்பவர் பார்த்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் இது தொடர்பாக காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...