×

ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது

கோவை, ஏப்.30: கோவை வடவள்ளி அருகே உள்ள சிவசக்தி காலனியை சேர்ந்தவர் யுவராஜ் (31). இவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (42) என்பவருடன் சேர்ந்து பிரிட்ஜ், வாஷிங் மெசின், கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். யுவராஜுக்கும், சந்தோசுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து தனியாக தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் யுவராஜ் பழுதான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தனது வீட்டின் அருகே குவித்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் அங்கே வந்த சந்தோஷ் அவற்றின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார். இதில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து யுவராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

The post ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Yuvraj ,Sivashakti Colony ,Vadavalli, Coimbatore ,Santhosh ,Velandipalayam ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...