×

சலூன் கடை ஊழியர் உட்பட 2 பேர் தற்கொலை

கோவை, ஏப். 28: கோவை இடையர்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (39). சலூன் கடை ஊழியர். இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த 24ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் இவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் இவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் சிதம்பரம் உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை நீலிகோணாம்பாளையம் என்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ்.

இவர் மனைவி சாந்தகுமாரி (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தகுமாரிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதேபோல், சம்பவத்தன்று கணவர், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தங்கராஜ் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சாந்தகுமாரி வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சலூன் கடை ஊழியர் உட்பட 2 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chidambaram ,Mariamman Koil Street, Adyarpalayam, Coimbatore ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை