×

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயம்

கோவை, ஏப்.28: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மூடுதுறை பஞ்சாயத்து பழயூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர், நரம்பு பிரச்னை தொடர்பாக சிகிச்சைக்காக கடந்த சில நாட்களாக வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி காலை 9.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மனைவி ஜோதிமணி என்பவருடன் வந்தார். பின்னர் சிகிச்சை முடித்துவிட்டு மருத்துவமனை எதிரே உள்ள பாலத்தின் அருகே தனது மனைவியை அமர சொல்லி விட்டு டீ குடிக்க சென்று வருவதாக சென்றார்.

அதன்பின், அவர் திரும்ப வரவில்லை. அவரது மனைவி ஜோதிமணி அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கடந்த ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

The post மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Palanichamy ,Palayur ,Muduthurai Panchayat, Punjaipuliambatti, Erode district ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை