×

4 நாள் நடைபெற்ற பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டப் பேரவை கடந்த 14ம் தேதி கூடியது. மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வால்பாறை தொகுதி அதிமுக உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் அன்றைய கூட்டம் அத்துடன்  ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து 15ம் தேதி 2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடந்தது. கேள்வி நேரம் முடிந்ததும் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.

கடைசியாக பேசிய சபாநாயகர் மு.அப்பாவு, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த 4 நாட்கள் கூட்டத்தில் 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அடுத்து, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டப் பேரவை கூடும். தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்

Tags : Valparai ,AIADMK ,D.K.Amul Kandasamy ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்