சென்னை: சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தில் பாஜ சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில் “ கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நேரத்தில் அதிகமாக இருக்கிறது. அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘கோவையில் இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம். அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது” என்றார்.
