×

வாலிபரிடம் நகை பறித்த ரவுடி கைது

சேலம், டிச.28: சேலம் கருமலைக்கூடலில் வாலிபரிடம் நகை பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சேலம் கருமலைக்கூடல் குப்பண்ணகவுண்டர்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (26). இவர் நேற்று சின்னகவுண்டனூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, இடைப்பாடி தொட்டில்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி முருகன் (எ) ரஜினிமுருகன் (24), கண்ணனை வழிமறித்து கால் பவுன் மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுபற்றி கருமலைக்கூடல் போலீசில் கண்ணன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரணை நடத்தி, ரவுடி ரஜினிமுருகனை கைது செய்தார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையில் அடைத்தனர். கைதான ரவுடி ரஜினிமுருகன் மீது ஏற்கனவே தேவூர் இரட்டைக்கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, ஒரு வழிப்பறி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rowdy ,jewelery ,teenager ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!