புதுடெல்லி: ஒன்றிய அரசு சார்பில் புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூறி, ஒன்றிய அரசுக்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய துறை கூட்டமைப்புகள், சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டு தளத்தால் ஜூலை 9 அன்று பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
The post புதிய தொழிலாளர் சட்டம் ஒன்றிய அரசுக்கு எதிராக ஜூலை 9ல் ஸ்டிரைக் appeared first on Dinakaran.
