அங்கு சில மாணவிகளுடன் கோபிகா தங்கி பயிற்சி பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கோபிகா அதே ஓட்டலில் நேற்று இரவு கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் அந்த மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மாணவி கோபிகா பயிற்சி பெற்ற ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகு விரைந்த நிலையில் பிரேதபரிசோதனை கூடம் அருகே கோபிகாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் காவல்துறை நியாயமாகவும்,நேர்மையாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலை பெறமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து நாமக்கல் டிஎஸ்பி ஆனந்த் ராஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனு அளித்தால் விரைவாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேதபரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்தனர். மாணவியின் தந்தை புகார் மனு அளித்த நிலையில் பிரேதபரிசோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவி கோபிகாவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
The post நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே கழிவறையில் மயங்கி விழுந்த கேட்டரிங் மாணவி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.