×

ஆணியில் தொங்க விட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

சேலம்: 6ம் வகுப்பு மாணவர்களை ஆணியில் தொங்க விட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் அருகே பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 25ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை, 6ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் போடா என ஒருமையில் பேசியதால் அவர்களை தாக்கி, ஒரு மாணவனை வகுப்பறை சுவரில் இருந்த ஆணியில் சட்டையை மாட்டி தொங்கவிட்டுள்ளனர். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6ம் வகுப்பு மாணவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுபற்றி பனமரத்துபட்டின போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே தகராறில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரையும் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ஆணியில் தொங்க விட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது 18...