நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையில் இருந்து 5 விசைப்படகு, ஒரு பைபர் படகில் சென்று 22 மீனவர்கள் கடந்த செவ்வாய் அன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 7 பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, வாக்கி டாக்கி, செல்போன், திசைகாட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்து சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த 8 மீனவர்கள் நாகை, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேதாரண்யம் மீனவர்களை நேற்று மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இந்நிலையில் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நாகை மீனவர்களை தாக்கிய 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.