நாகை அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு..!

நாகை: நாகை அருகே குருக்கத்தி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி 11-ம் வகுப்பு மாணவி அஸ்வினி உயிரிழந்தார். அஸ்வினி தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அவரது தம்பி அவினாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி செல்லும் வழியில் சாலை தடுப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post நாகை அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: