நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு..!!

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி நியமனத்துக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கிய நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2,569 இடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி நேர்காணல் முடிந்த நிலையில் பணிநியமனத்துக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டது.

The post நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: