அதிக சிக்சர்… ரோகித் சாதனை!

உலக கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா (51 சிக்சர்) முதலிடம் பிடித்துள்ளார். அரையிறுதியில் நேற்று 4 சிக்சர்களைத் தூக்கிய அவர், வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் கிறிஸ் கேல் சாதனையை (49 சிக்சர்) முறியடித்தார். நடப்பு தொடரில் மட்டுமே அவர் இதுவரை 28 சிக்சர்கள் அடித்துள்ளார். அந்த வகையில், 2015 உலக கோப்பையில் கிறிஸ் கேல் 26 சிக்சர் அடித்து படைத்த சாதனையும் உடைந்து நொறுங்கியது.

* நடப்பு தொடரில் கோஹ்லி 8 முறை 50+ ஸ்கோர் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சச்சின் 2003 உலக கோப்பையிலும், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2019 உலக கோப்பையிலும் தலா 7 முறை 50+ ஸ்கோர் அடித்திருந்தனர்.

* ஷ்ரேயாஸ் அய்யர் நேற்று 67 பந்தில் சதம் அடித்தார். உலக கோப்பை நாக்-அவுட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இது அமைந்தது. முன்னதாக, ஆஸி. வீரர் கில்கிறிஸ்ட் இலங்கைக்கு எதிராக 2007 பைனலில் 72 பந்தில் சதம் அடித்திருந்தார்.

The post அதிக சிக்சர்… ரோகித் சாதனை! appeared first on Dinakaran.

Related Stories: