அமித் மாளவியாவின் பதிவை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் மக்களை பிளவுபடுத்தும் கொள்கை எனவும், சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்கி எறிவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்தும் எனவும் குறிப்பிட்டு, விரிவான டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த டிவிட் பதிவிடப்பட்ட பிறகும், அமித் மாளவியா தனது கருத்தில் இருந்து பின்வாங்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ முன்வரவில்லை. இது, அவர் சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக செய்யும் நோக்கத்தையே கொண்டுள்ளது. இது தொடர்பான இணைய இணைப்பை (யூஆர்எல் லிங்க்) இணைத்துள்ளேன். பொது மக்களிடையே வெறுப்பையும், வகுப்புவாதத்தையும் தூண்டும் விதமாக நடந்து கொண்ட அமித் மாளவியா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பாஜ ஐடி பிரிவு தலைவர் மீது கமிஷனரிடம் திமுக புகார் appeared first on Dinakaran.