மே தினத்தில் டாஸ்மாக் மூடல்: கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனைச்சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மே தினத்தை முன்னிட்டு வருகின்ற 1ம் தேதி திங்கட்கிழமை, கண்டிப்பாக மூட வேண்டும். மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறந்திருந்தால் மது விற்பனை செய்தால் அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post மே தினத்தில் டாஸ்மாக் மூடல்: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: