துபாய்: மக்களின் வாழ்வில் அரசின் தலையீடு குறைவாக இருப்பதை உறுதி செய்வதே அரசின் வேலை என்று துபாயில் உலக அரசுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை. இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50கோடிக்கும் அதிகமானோர் வங்கி சேவையில் இணைந்துள்ளனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.