மார்கழி மாத பிறப்பையொட்டி டிச.17 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மார்தழி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
The post மார்கழி உற்சவத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பில் மாற்றம் appeared first on Dinakaran.