இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், “மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது; குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, சரியான சூழல் மணிப்பூரில் நிலவுகிறது”, எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் தொடர்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பற்றி எரியும் மணிப்பூர்: பெண்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையம் கேள்வி; ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கமல் வேண்டுகோள்.. appeared first on Dinakaran.