நாம் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக் கொள்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட்

சென்னை: கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், துவளாமல் மீண்டுள்ளது நெகிழ்ச்சியடைய வைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறுவதை கண்டு நமது நெஞ்சங்கள் பெருமிதத்தால் பொங்குகின்றன. தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் 15 வீரர்கள், 2 பயிற்சியாளர்கள் எங்கள் விளையாட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகி உள்ளனர். இது எல்லைகளுக்கு அப்பால் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. நாம் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக் கொள்வோம் என முதலமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The post நாம் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒற்றுமை உணர்வைத் தழுவிக் கொள்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் appeared first on Dinakaran.

Related Stories: