அத்துடன் திருமணம் செய்வதாக நடித்து ஏமாற்றிவிட்டு, விவகாரத்து பேப்பரில் கையெழுத்து போட பல லட்சம் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் நிகிதா மீது அவரது முன்னாள் கணவரான தென்னிந்திய பார்வார்டு பிளாக் நிறுவனர் திருமாறனும் தெரிவித்திருந்தார். இதனால் நிகிதா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. அந்த வகையில், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். இவர் மாணவிகளையும், பேராசிரியர்களையும் தகாத முறையில் பேசியது உள்ளிட்ட புகார்கள் நிகிதா மீது எழுந்துள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
The post மடப்புரம் காவலாளி அஜித் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குநர் திட்டம்..!! appeared first on Dinakaran.
