இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல், கர்நாடகாவை தொடர்ந்து ஆட்சியை பா.ஜவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதன் முதற்கட்டமாக ஜோதிராதித்யாவின் முக்கிய ஆதரவாளரும், காங்கிரசில்இருந்து 2020ம் ஆண்டு விலகியவருமான பைஜ்நாத்சிங் நேற்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அதுவும் மபியின் ஷிவ்புரியில் இருந்து போபால் வரை சுமார் 300 கிமீ 400 கார்களில் தொண்டர்படையுடன் சென்று கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சைரன்கள் ஒலிக்க 400 கார்களின் அணிவகுப்பு மபியை தற்போது அதிர வைத்துள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது.
The post மபியை அதிர வைத்த இணைப்பு சிந்தியாவின் ஆதரவாளர்பா.ஜவில் இருந்து விலகல்: 400 கார்களுடன் 300 கிமீ பயணம் செய்து மீண்டும் காங்கிரசிற்கு தாவினார் appeared first on Dinakaran.