இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அலிபிரி மலைப்பாதையில் உள்ள மான் பூங்கா எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு கரடி வெளியே வந்தது. அது நடைபாதையில் சிறிது தூரம் சென்றது. பின்னர் அந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது அவ்வழியாக வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இதே நடைபாதையில் நடந்து வந்த 4 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்றது. பக்தர்கள், போலீசார் விரட்டியதால் சிறுவனை சிறுத்தை விட்டு விட்டு சென்றது. இந்நிலையில் நள்ளிரவு நடைபாதையில் கரடி நடமாடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
The post சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில் திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு கரடி நடமாட்டம்: பக்தர்கள் பீதி appeared first on Dinakaran.