இதனிடையே சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது X தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார். அதில்; விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) ஆளுநர் உரையின் போது சட்டப்பேரவையில் ஆளுநரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான X தளத்தில் வெளியிட்ட ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் appeared first on Dinakaran.