இவ்வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக 90 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி,ஜெயவேல் தீர்ப்பினை ஒத்திவைத்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அமைச்சர் பொன்முடி, சென்னை துணை மேயர் மகேஷ் குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
The post நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேரை விடுதலை செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்!! appeared first on Dinakaran.