இந்நிலையில், நேற்று கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கும், ஐஸ்மல்லி ரூ.500க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.450க்கும் அரளி பூ ரூ.150 க்கும் சாமந்தி ரூ.140க்கும் பன்னீர் ரோஸ் ரூ.70க்கும் சாக்லேட் ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், கேரட், எலுமிச்சை பழம் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கேரட் ரூ.130க்கும், வெங்காயம் ரூ.50க்கும், எலுமிச்சை பழம் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ கேரட் ரூ.180க்கும், வெங்காயம் ரூ.70க்கும், எலுமிச்சை பழம் ரூ.240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், கடந்த வாரம் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் குறைந்த விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் முடிந்த பிறகு பூக்களின் விலை படிப்படியாக குறையும் எனக் கூறினார். கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கேரட், வெங்காயம், எலுமிச்சை பழம் விலை மட்டும் மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலைகள் இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்றார்.
The post கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி அனைத்து பூக்களின் விலையும் உயர்வு: வரத்து குறைவால் கேரட், எலுமிச்சை, வெங்காயம் விலை எகிறியது appeared first on Dinakaran.