இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில்,“இதுவரை நடந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, தற்போது வரை நடந்த வழக்கு விசாரணை குறித்து நான்கு பக்க அறிக்கையை தாக்கல் செய்தோம். மேலும், சில எலக்ட்ரானிக் தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தோம். அதேபோல், புதிதாக சிலரிடம் விசாரணை மேற்கொள்ள சம்மன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தோம். எனவே, வழக்கு விசாரணை மேற்கொள்ள காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர், வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்’’ என்றார்.
The post கொடநாடு கொலை வழக்கு 4 பக்க இடைக்கால அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.