திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நந்தவனப்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார், வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், 20க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.