இதனால் பல சிறிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மழைக்கு 3 மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வாரத்தில் கன மழைக்கு 42 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 189 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 6671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8899 ஹெக்டர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ரூ.9.5 கோடி மதிப்பிலான விவசாய ெபாருட்கள் சேதமடைந்தன. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. நேற்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மட்டும் ஓரளவு மழை பெய்தது. மற்ற பகுதிகளில் மழையின் வேகம் குறைந்துள்ளது. இன்று குறிப்பிடும்படியாக எந்த மாவட்டத்திலும் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை .
The post கேரளாவில் கன மழைக்கு ஒரு வாரத்தில் 42 பேர் பலி appeared first on Dinakaran.