இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் இறுதியாக வைக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டப்பட்ட நபராகவே இருந்தபோது திடீரென மார்ச் 22ம் தேதி அவரை கைது செய்தது ஏற்று கொள்ள முடியாது, இது சட்ட விரோத கைது என வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடுமையான பதில் மனு, விவாதங்கள் நடைபெற்றது. நீதிமன்ற அலுவலக நேரம் நிறைவடைவதற்கு முன் இந்த வழக்கு விசாரணையை 7ம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர் .
The post கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.