அதில் காணாமல் போன, ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்பிலான டிக்கெட்களை பயணிகளிடம் தமிழரசு வழங்கியதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த நிலையில், கண்டக்டர் தமிழரசு, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே காணாமல் போன டிக்கெட்டை கிளை மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் 4 பேர் மூலமாக கண்டக்டர்களுக்கு தெரியாமல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கியதாக கண்டக்டர் தமிழரசுவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளை மேலாளர் உள்பட 14 ேபரிடம் விசாரணை நடக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கள்ளக்குறிச்சி அரசு பஸ் பணிமனையில் 2021-22ல் மாயமான ரூ.9 லட்சம் மதிப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கல்: கண்டக்டர் சஸ்பெண்ட்: மேலாளர் உள்பட 14 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.