அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் கூறியிருக்கிறார். சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தான் திமுக தலைவர் குறிப்பிடுகிறார். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாநில அரசினைக் கண்டிக்காமல், ஒன்றிய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
The post கச்சத்தீவு விவகாரத்தில் அதிமுக வெளிநடப்பு ஏன்? ஓபிஎஸ் விளக்கம் appeared first on Dinakaran.