க.பரமத்தி அருகே சேவல் சண்டை: 4 பேர் கைது

 

க.பரமத்தி, நவ. 15: க.பரமத்தி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையம் சுற்றுப்பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வி.என்.புதூர் பகுதிக்கு சென்ற எஸ்ஐ தில்லைக்கரசி மற்றும் க.பரமத்தி போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தவர்களை சுற்றிவளைத்தனர். விசாரணையில் கொடுமுடி அருகே ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சீனிவாசன்(25), சாலைபுதூரைச் சேர்ந்த சங்கர் (36), வேட்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி(44), கரூர் செம்மடை பகுதியை சேர்ந்த முருகேசன் (55) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post க.பரமத்தி அருகே சேவல் சண்டை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: